டெல்லி: செல்போன் ஒட்டுக்கேட்பு, வேளாண் சட்டங்கள் ரத்து, விலைவாசி உயர்வு பிரச்சனைகளில் சமரசத்துக்கு இடமில்லை என ராகுல் காந்தி கூறியுள்ளார். நாடாளுமன்ற விவாதம் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையில் உறுதியாக உள்ளோம் எனவும் கூறினார். நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் நடத்திய ஆலோசனைக்கு பிறகு ராகுல் காந்தி பேட்டியளித்தார்.