ஆர்.டி.ஐ கேள்விக்கு இந்தியில் பதில் - ஒன்றிய அரசு பதில் அளிக்க உத்தரவு

சென்னை: ஆர்.டி.ஐ.யில் கேட்ட கேள்விக்கு இந்தியில் பதில் அளித்தது குறித்து ஒன்றிய அரசு விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஞானசேகரன் தொடர்ந்த வழக்கில் ஒன்றிய அரசு பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விக்கு அரசு இந்தியில் பதில் அனுப்பியதாக மனுதாரர் வழக்கு தொடர்ந்துள்ளார். தனக்கும் இந்தி தெரியாது என்று தெரிவித்த நீதிபதி, இதுகுறித்து ஒன்றிய அரசு பதில் அளிக்க உத்தரவிட்டார். ஒன்றிய அரசு 16ம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories: