×

அதிமுகவை யாராலும் கைப்பற்ற முடியாது: கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

சென்னை: அதிமுகவை யாராலும் கைப்பற்ற முடியாது என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்துள்ளார். நான்கரை ஆண்டுகளாக நாங்கள் இருவரும் அதிமுகவை வழி நடத்தி வருகிறோம் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். கட்சியை தனிப்பட்ட குடும்பம் வழி நடத்த முடியாது என்றும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். தேனியில் நடைபெற்ற போராட்டத்துக்கு பிறகு ஓ.பி.எஸ் பேட்டியளித்துள்ளார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் அதிமுக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தேர்தலில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை முன்னிறுத்தவில்லை என அன்வர் ராஜா பேசியது தவறு என்று ஓ.பி.எஸ் குறிப்பிட்டுள்ளார்.

Tags : admk
× RELATED பீகாரில் இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு