டோக்கியோ: ஒலிம்பிக் போட்டியின் மகளிர் குத்துச்சண்டை 69 கிலோ எடைபிரிவில், இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன் காலிறுதிக்கு முன்னேறி பதக்க நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார். அசாம் மாநிலத்தில் இருந்து ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்ற முதல் வீராங்கனை என்ற பெருமைக்குரிய லவ்லினா (23 வயது), காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜெர்மனியின் நடின் அபெட்ஸ் (35 வயது) உடன் நேற்று மோதினார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில் லவ்லினா 3-2 என்ற புள்ளிக் கணக்கில் போராடி வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.