திருவனந்தபுரம்:கேரள அரசின் சித்திரை விஷு பம்பர் லாட்டரி குலுக்கல் கடந்த 22ம் தேதி நடந்தது. இதன் முதல் பரிசு ரூ.10 கோடி ஆகும். குலுக்கல் நடந்து 5 நாட்கள் ஆன பிறகும் அந்த கோடீஸ்வர அதிர்ஷ்டசாலி யார் என தெரியாமல் இருந்து வந்தது. இந்நிலையில் 10 கோடி பரிசு பெற்ற அந்த அதிர்ஷ்டசாலி கோழிக்கோடு அருகே உள்ள வடகரையை சேர்ந்த ஷிஜு என தெரியவந்துள்ளது. இவர் கட்டிட தொழிலாளி ஆவார்.