ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர், லடாக்கிற்கு 4 நாள் பயணமாக சென்றுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ஜம்மு காஷ்மீரின் காஷ்மீர் பல்கலைக் கழகத்தில் 19வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் நேற்று கலந்து கொண்டார். மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி அவர் பேசியதாவது: பருவநிலை மாற்றமானது இந்த நூற்றாண்டில் மக்கள் முன் இருக்கும் மிகப்பெரிய சவாலாகும். இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் சமீபத்தில் ஏற்பட்ட இயற்கை பேரழிவுகளுக்கு இதுவே காரணம்.