ஜோலார்பேட்டை:திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை சேர்ந்தவர் பேரறிவாளன். முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இவருக்கு சிறுநீரகத் தொற்று உள்ளிட்ட மருத்துவ சிகிச்சைகளுக்காக அவரது தாயார் அற்புதம்மாள் தமிழக முதல்வரிடம் பரோல் வழங்க மனு அளித்தார். அதன்படி பேரறிவாளனுக்கு கடந்த மே மாதம் 28ம் தேதி ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை அடுத்து ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்புடன் பேரறிவாளன் அழைத்து வரப்பட்டார்.