மாடியிலிருந்து விழுந்த குழந்தை பரிதாப பலி

வேளச்சேரி: ஒடிசாவை சேர்ந்தவர் கமலக்கந்த் பாரிக் (36). இவரது மனைவி சத்யபாமா (எ) ரஸ்மிதா (31). இவர்களது ஒன்றரை வயது மகன் ஹிமாசு பாரிக். அடையாறு சாஸ்திரி நகர் 11வது குறுக்கு தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 4வது மாடியில் உள்ள ஒரு வீட்டில், கமலக்கந்த் தனது குடும்பத்துடன் தங்கி, வீட்டு வேலை செய்து வருகிறார். நேற்று, சத்யபாமா தனது குழந்தைக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்போது, வீட்டில் இருந்த கட்டில் மீது ஏறிய குழந்தை, அருகில் உள்ள ஜன்னல் வழியாக வெளியே எட்டிப் பார்த்துள்ளது.

அந்த ஜன்னலில் கம்பி இல்லாததால், குழந்தை எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த குழந்தையை உடனடியாக அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக இறந்தது. தகவலறிந்து வந்த சாஸ்திரி நகர் போலீசார், குழந்தையின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: