கோவை: 288 சொற்கள், படங்கள் பெயர்களை மனப்பாடமாக கூறும் கோவை 2 வயது குழந்தைக்கு ‘புக் ஆப் நோபல்’ சாதனை விருது கிடைத்துள்ளது. கோவை மாவட்டம், சரவணம்பட்டி அம்மன் கோயில் பகுதியை சேர்ந்த மகேந்திரன்-மஹிஷா ஆகியோரின் மகன் உதிரன். ஒரு வயது 11 மாதங்களே ஆன இந்த குழந்தை தமிழ் அகராதி, மாதங்களின் பெயர்கள், வண்ணங்கள், விலங்குகள், பறவைகள் என சுமார் 288 சொற்கள் மற்றும் படங்களின் பெயர்களை தனது மழலை சொற்களால் கூறி அசத்துகிறது.