×

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று ஒரே நாளில் 2848 பேருக்கு கொரோனா.: ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

டோக்கியோ: டோக்கியோ நகரில் இன்று ஒரே நாளில் 2848 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் நிலையில், கொரோனா பாதிப்பு இன்று அதிக அளவில் பதிவாகி உள்ளது. டோக்கியோ நகரில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அங்கு அவசரகால நிலைமை அமல்படுத்தப்பட்டு உள்ளது.

கொரோனா தொற்று தொடங்கியதிலிருந்து ஜப்பானிய தலைநகரில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று தான் பாதிப்பு அதிக எண்ணிக்கையில் பதிவாகி உள்ளதாக அந்தநாட்டி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். டோக்கியோவில் உள்ளவர்கள் 20.8% பேர் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவருவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்தநிலையில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டி சம்பந்தப்பட்டவர்கள்  7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக ஒலிம்பிக் அமைப்பாளர்கள் கூறியுள்ளனர். அவர்களில் 4 பேர் விளையாட்டு வீரர்கள் என தெரிவித்துள்ளனர்.  

இதனையடுத்து ஒலிம்பிக் போட்டிகளுக்காக சரியான கட்டுப்பாட்டு விதிகள் அமலில் இருந்த போதிலும் விளையாட்டு வீரர்கள் உள்பட 155 பேருக்கு கொரோனா பாதிப்புகள் பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Corona ,Tokyo ,Olympic Games , Corona for 2848 people in one day today in Tokyo, the capital of Japan: Corona impact increases as the Olympics
× RELATED பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தீபம்...