×

இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் காவலில் இருந்த 5,569 கைதிகள் உயிரிழப்பு.. அதிகபட்சமாக உ.பி.யில் 1,318 பேரும் ; தமிழகத்தில் 232 பேரும் மரணம்!!

சென்னை : தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் போலீஸ் காவல் மற்றும் நீதிமன்ற காவலில் இருந்த 232 கைதிகள் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 19ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில், மக்களவை கேள்வி நேரத்தின் போது போலீஸ் காவலில் இருக்கும் போது பலியான கைதிகள் குறித்த விவரங்களை கேட்ட எம்.பி.,க்கு, மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் பதில் அளித்துள்ளார்.

*இந்தியா முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் போலீஸ் காவலில் 348 பேரும், நீதிமன்ற காவலில் 5,221 பேரும் உயிரிழந்தனர்.

*இந்தியா முழுவதும் கடந்த 2018 – 19ம் ஆண்டில் போலீஸ் காவலில் 136 கைதிகளும் நீதிமன்ற காவலில் 1,797 கைதிகளும் உயிரிழந்துள்ளனர்.

*2019 – 2020ம் ஆண்டில் போலீஸ் காவலில் 112 பேரும் நீதிமன்ற 1,584 பேரும் உயிரிழந்துள்ளனர். .2020-21-ல் போலீஸ் காவலில் 100 பேரும், நீதிமன்ற காவலில் 1,840 பேரும் உயிழந்துள்ளனர்.

இந்த மூன்று ஆண்டுகளில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் 1,318 கைதிகள் உயிரிழந்துள்ளனர். அதில், போலீஸ் காவலில் 23 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் 232 கைதிகள் உயிரிழந்து உள்ளனர். அதில், போலீஸ் காவலில் 25 பேர் பலியாகி உள்ளனர்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Tags : India ,U. RB ,Tamil , போலீஸ் காவல்
× RELATED மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான...