முக்கிய செய்தி இந்தியா 75வது ஆண்டு சுதந்திர விழா வெறும் அரசு நிகழ்ச்சியாக இருக்கக்கூடாது, மக்கள் இயக்கமாக இருக்க வேண்டும்: எம்.பி.க்கள் கூட்டத்தில் மோடி பேச்சு Jul 27, 2021 75வது சுதந்திர தினம் மோடி டெல்லி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ‘பெகாசஸ்’ விவகாரத்தை விசாரிக்க கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்ததால், இரு அவைகளும் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே ‘பெகாசஸ்’ ஒட்டுக் கேட்பு விவகாரத்தை கையிலெடுத்த எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களவையில் அமளிக்கு இடையே நேற்று இரு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு இன்று காலை வரை அவை ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று காலை நாடாளுமன்றக் கூட்டம் தொடங்கியது. அப்போது, இரு அவைகளிலும் எதிர்க்கட்சியினர் பெகாசஸ் விவகாரத்தை விசாரிக்க கோரி கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து இரு அவைகளையும் பிற்பகல் 12 மணிவரை ஒத்திவைப்பதாக அவைத் தலைவர்கள் அறிவித்தனர். அதன்பின் அவை தொடங்கியதும் மீண்டும் எதிர்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு, தொடர்ந்து அவை நடவடிக்கைகள் தொடங்கின. இதற்கிடையே, பாஜக நாடாளுமன்ற எம்பிக்கள் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. அப்போது அவர் பேசுகையில், ‘பெகாசஸ் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்கட்சிகள் இடையூறு செய்கின்றன. இவ்விவகாரம் தொடர்பாக அரசு விவாதத்திற்கு தயாராக உள்ளது’ என்றார். தொடர்ந்து நாடாளுமன்ற விவகார அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கூறுகையில், ‘சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டு கொண்டாட்டத்தை குறிக்கும் வகையில், பாஜக எம்பிக்கள் ஒவ்வொரு கிராமத்திலும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். 75வது ஆண்டு விழா வெறும் அரசு நிகழ்ச்சியாக இருக்கக்கூடாது. மக்கள் பங்களிப்புடன் கூடிய மக்கள் இயக்கமாக இருக்க வேண்டும். வரும் 2047ம் ஆண்டில் இந்தியா 100வது ஆண்டு சுதந்திர தினம் கொண்டாட உள்ளதால், மக்கள் எதிர்கால இந்தியா குறித்து என்ன நினைக்கிறார்கள்? என்பது குறித்த பரிந்துரை, யோசனைகளை பெற வேண்டும்’ என்றார்.
ஒப்புகை சீட்டை முழுமையாக எண்ணக் கோரிய வழக்கு தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் கேள்வி: 5 முக்கிய சந்தேகங்களை எழுப்பினர்; விளக்கத்துக்கு பின் தீர்ப்பு ஒத்திவைப்பு
உத்தரப் பிரதேச மாநில எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மக்களவை தேர்தலில் கண்ணூஜ் தொகுதியில் போட்டி என சமாஜ்வாடி கட்சி அறிவிப்பு!
அரசியல் சட்டப்படி அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி பெறும் உரிமையை அளித்திட வேண்டும்; முதல்வருக்கு பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோரிக்கை
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வெயில்!: வெப்பத்தின் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?..செய்ய வேண்டியவை.. செய்யக் கூடாதவை என்னென்ன?
கோட்டக் மஹிந்திரா வங்கியில் ஆன்லைன் மூலம் புதிய வாடிக்கையாளர்கள் சேர்த்தல், புதிதாக கிரெடிட் கார்டுகளை வழங்க தடை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!!
மயிலாடுதுறை தருமபுரம் ஆதினத்திற்கு மிரட்டல் விடுத்த வழக்கு; கலைமகள் கல்வி நிறுவனத்தின் தாளாளர் குடியரசுக்கு ஜாமின் வழங்க ஐகோர்ட் மறுப்பு..!!
தமிழ்நாட்டில் நேற்று சாதனை அளவாக 40.50 மெகா யூனிட் சூரிய மின்சாரம் பயன்படுத்தப்பட்டது: மின்வாரியம் தகவல்
மோடியின் சர்ச்சை பேச்சு விவகாரம்; போர் காலத்தில் பாட்டி நகை கொடுத்தார் தாய் ‘மாங்கல்யத்தை’ தியாகம் செய்தார்: பிரியங்கா காந்தி பதிலடி
ஒப்புகைச் சீட்டுகளை பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்க்கக் கோரிய வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
இட ஒதுக்கீட்டை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் இந்தியா கூட்டணி அரசு செயல்படும்: சமாஜிக் நியாயக் சம்மேளன மாநாட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி
தோல்வி பயம் வந்துவிட்டதால்தான் பிரதமர் மோடி தேவையில்லாமல் சர்ச்சைக்குரிய வகையில் பேசுகிறார்: ஆர்.எஸ்.பாரதி பேட்டி
இந்தியாவில் நேற்று பதிவான அதிகபட்ச வெப்பநிலையில் சேலம் 3ம் இடம் (108.14°F) பிடித்துள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல்
நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி வசூலிக்க காங்கிரஸ் கட்சி திட்டம்: தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
ஸ்மோக் பிஸ்கட்(Smoke Biscuits) குழந்தைகள் உட்கொள்ள வேண்டாம், அது உயிருக்கு ஆபத்து: உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை