குற்றம் தொழில் போட்டியால் கஞ்சா வியாபாரிகள் ஆயுதங்களுடன் மோதல்: ஆபத்தான நிலையில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி Jul 27, 2021 சென்னை: சென்னை வடபழனியை சேர்ந்தவர் பார்த்திபன்(40). இவர் தண்ணீர் கேன் போடும் வேலை செய்து வருகிறார். பார்த்திபனுக்கும் கஞ்சா வியாபாரம் செய்யும் கும்பலுக்கும் இடையே தொழில் போட்டி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த மாதம் இறப்பு நிகழ்ச்சி ஒன்றில் பார்த்திபன் தரப்பை சேர்ந்தவர்கள் பூக்கடை பகுதியை சேர்ந்த கார்த்திக்(29) தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ேநற்று இரவு வடபழனியில் கஞ்சா விற்பனை செய்வதில் மோதல் ஏற்பட்டது. அப்போது பார்த்திபனை கார்த்திக் தரப்பினர் பயங்கர ஆயுதம் மற்றும் கத்தியால் வெட்டி சாய்த்தனர். இதில் படுகாயமடைந்த பார்த்திபன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.இதுகுறித்து தகவல் அறிந்த வடபழனி போலீசாா் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்திபனை மீட்டு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். மோதல் தொடர்பாக வடபழனி போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இதற்கிடையே பார்த்திபனை வெட்டிய கஞ்சா வியாபாரி கும்பலை சேர்ந்த கார்த்திக், மதுரவாயல் பகுதியை சேர்ந்த ராமாபுரம் கைக்கேல்(29), கெருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த காத்திகேயன்(27) ஆகியோர் காவல் நியைத்தில் சரணடைந்தனர். 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் வடபழனியில் கஞ்சா விற்பனை செய்வதில் ஏற்பட்ட தகராறில் பார்த்திபனை வெட்டியதாக தெரியவந்தது. மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ராஜேஷ் மற்றும் சசிகுமார் ஆகியோரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
சென்னை தாம்பரம் அருகே இரும்புலியூரில் சிபிஐ அதிகாரி போல் பேசி ஆள்மாறாட்டம் செய்து மோசடி செய்த 4 பேர் கைது
குண்டாஸ் முடிந்து வெளியே வந்த ஒரு வாரத்தில் பாலியல் தொழில் நடத்திய பிரபல புரோக்கர் கைது: லாட்ஜ் மேலாளரும் சிக்கினார்
வரதட்சணை கொடுமை வழக்கில் தேடப்பட்டவர் சென்னை விமான நிலையத்தில் தலைமறைவு குற்றவாளி கைது: துபாய்க்கு தப்பிச்செல்ல முயன்றபோது சிக்கினார்
அரும்பாக்கம் பகுதியில் குட்கா பதுக்கிய வீட்டிற்கு சீல்: வடமாநில வாலிபர் உள்பட இருவர் கைது, வீட்டு உரிமையாளருக்கு ரூ.25000 அபராதம்
மது பாட்டில்களை மொத்த விற்பனை செய்ததால் டாஸ்மாக் மேற்பார்வையாளர் உட்பட 4 பேர் சஸ்பெண்ட்: மாவட்ட மேலாளர் நடவடிக்கை
மறைமலைநகர் அருகே டாஸ்மாக் பாரில் பொதுமக்களை பீர் பாட்டிலால் தாக்கும் ரவுடிகள்: சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்
சென்னை புளியந்தோப்பு அருகே சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி வேட்பாளர் மீது தாக்குதல், வேட்பு மனுவை திரும்ப பெறவிட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் : ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதி