முக்கிய செய்தி உலகம் பல ஆயிரம் கோடி வங்கிக் கடன் மோசடி; தொழிலதிபர் விஜய் மல்லையா திவாலானவராக அறிவிப்பு: லண்டன் நீதிமன்றம் அதிரடி Jul 27, 2021 விஜய் மல்லையா லண்டன் லண்டன்: பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவின் ரூ.14 ஆயிரம் கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை நேற்று அதிரடியாக முடக்கி உத்தரவிட்டுள்ளது. மேலும், பல ஆயிரம் கோடி வங்கிக்கடன் மோசடி வழக்கில் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையா, ‘திவால் ஆனவர்’ என்று லண்டன் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பால் வங்கிகள் தங்களது பணத்தை மீட்டெடுக்க முடியும் என்று நம்பிக்கை கொண்டுள்ளன. பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, பாங்க் ஆப் பரோடா, காா்ப்பரேஷன் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்டவற்றில் கடன் வாங்கிய தொழிலதிபா் விஜய் மல்லையா (65), அதைத் திருப்பிச் செலுத்த முடியாததால் பிரிட்டனுக்குத் தப்பிச் சென்றாா். அவர் வாங்கிய கடனுக்காக கடந்த 2013ம் ஆண்டிலிருந்து 11.5 சதவீத கூட்டு வட்டியை வங்கிகள் விதித்து வருகின்றன. அசலுடன் வட்டியையும் சோ்த்து விஜய் மல்லையா திரும்பி அளிக்க வேண்டும் என்று வங்கிகள் கோரி வருகின்றன. இந்தியாவில் உள்ள விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான ஏராளமான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி வைத்துள்ளது. அச்சொத்துகளுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்தப் பாதுகாப்பை ரத்து செய்வதற்கு அனுமதி கோரி லண்டனில் உள்ள உயர் நீதிமன்றத்தில் இந்திய வங்கிகள் தரப்பில் கோரப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கில், விஜய் மல்லையாவின் சொத்துகள் மீதான பாதுகாப்பை அகற்றவும், சர்வதேச அளவிலான சொத்துகளை முடக்கவும் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், விஜய் மல்லையாவுக்கு எதிராக திவால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அவரது சொத்துக்களை முடக்க இந்திய வங்கிகளுக்கு நிபந்தனையற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பால் விஜய் மல்லையாவுக்கு கடன் அளித்த பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்புக்கு, இது மிகப் பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வங்கிகள் கடனை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து முறையீடு செய்யப் போவதாக விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். இருந்தும், அதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, விஜய் மல்லையாவை இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வருதல் தொடர்பாக இருந்த சட்டச் சிக்கல்கள் தீர்ந்த நிலையில், தற்போது நீதிமன்றத்தின் உத்தரவு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. விரைவில், அவர் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அதேநேரத்தில், விஜய் மல்லையாவின் சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. இதை விஜய்மல்லையாவும் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், விஜய் மல்லையா நேற்றிரவு வெளியிட்ட தனது டுவிட்டர் பதிவில், ‘ரூ.6,200 கோடி கடனுக்காக, அரசு வங்கிகளின் உத்தரவின் பேரில் ரூ.14,000 கோடி மதிப்புள்ள எனது சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. அதாவது, ரூ.9,000 கோடி ரூபாயை ரொக்கமாகவும், ரூ.5,000 கோடிக்கும் மேலானவற்றை அசையாக சொத்துகளாகவும் உள்ளன. அமலாக்கத்துறையிடம் பணத்தை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்பதால், வங்கிகள் என்னை திவாலாக்குமாறு கோருகின்றன. நம்பமுடியவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.
6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்தவர்களுக்கு டோக்கன்: தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு
102 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு விறுவிறு: 8 ஒன்றிய அமைச்சர், 2 மாஜி முதல்வர், 1 மாஜி ஆளுநரின் எதிர்காலம் என்னாகும்?
மக்களவை தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 51.41% வாக்குகள் பதிவாகியுள்ளன: தேர்தல் ஆணையம் தகவல்
தேர்தலில் நாங்கள் மக்களை நம்புகிறோம் மோடி, வாக்கு இயந்திரங்களை நம்புகிறார்: ஓட்டுபோட்ட பின் செல்வப்பெருந்தகை பேட்டி
மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள தமன்போக்பி வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு; வாக்குப்பதிவின்போது வன்முறை வெடித்ததால் பதற்றம்
மக்களவை தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 24.37% வாக்குகள் பதிவு; அதிகபட்சமாக நாமக்கல் தொகுதியில் 26.58%
மக்களவை தேர்தல்; தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி 12.55 சதவிகித வாக்குகள் பதிவு.! அதிகபட்சமாக கள்ளக் குறிச்சியில் 15.10% பதிவு
நாம் ஓட்டு போட்டோம் என்று கூறுவதில் மரியாதையும், கௌரவமும் இருக்கிறது: தனது வாக்கை நடிகர் ரஜினிகாந்த் பேட்டி
தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 102 மக்களவை தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது: அனைவரும் தவறாமல் வாக்களியுங்கள்..!
தமிழ்நாடு, புதுவையில் 40 மக்களவை தொகுதியிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடக்கம்: 1.50 லட்சம் போலீஸ், துணை ராணுவம் பாதுகாப்பு
நாளை நடக்கிறது மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு; மருத்துவர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.! பொது சுகாதாரத்துறை உத்தரவு
தமிழ்நாட்டில் இன்று 13 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் கொளுத்தியுள்ளது: அதிகபட்சமாக வேலூரில் 107 டிகிரி
மக்களவை தேர்தலை ஒட்டி நாளை பொதுவிடுமுறை விடப்பட்டுள்ளதால் சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயங்கும் என அறிவிப்பு
மக்களவை தேர்தலில் வாக்களிக்க முதியோர், மாற்றுத்திறனாளிகளை வீட்டிலிருந்தே அழைத்துச் செல்ல இலவச வாகன வசதி: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்