ராணிப்பேட்டை : அம்மூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு வருகிற 2ம்தேதி வரை நெல் மூட்டைகளை எடுத்து வர வேண்டாம் என்று விவசாயிகளுக்கு கண்காணிப்பாளர் பழனி வேண்டுகோள் விடுத்துள்ளார்.ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு லாலாப்பேட்டை, சோளிங்கர், பொன்னை, அரக்கோணம், காவேரிப்பாக்கம், வாலாஜா, ஆற்காடு, விளாப்பாக்கம், திமிரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளைந்த பல்வேறு ரக நெல் மூட்டைகளை டிராக்டர் மற்றும் மாட்டுவண்டிகளில் எடுத்து வந்து விற்பனை செய்து பணத்தை பெற்று செல்கின்றனர்.