இந்தியா பெகாசஸ் செல்போன் உளவு விவகாரம்; மாநிலங்களவையில் எதிர்கட்சியின் தொடர் அமளி: மதியம் 2 மணி வரை அவை ஒத்திவைப்பு Jul 27, 2021 பெகாசஸ் டெல்லி: மாநிலங்களவையில் எதிர்கட்சியின் தொடர் அமளி காரணமாக மதியம் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பெகாசஸ் செல்போன் உளவு விவகாரத்தை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கடட்சிகள் போராட்டம் நடத்தின. சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஒட்டு கேட்பு புகார்களை மத்திய அரசும் , பா.ஜ.க.வும் மறுத்து வருகின்றன. இது புனையப்பட்ட கதை, ஆதாரம் இல்லை என கூறி வருகின்றனர். ஆனாலும் நாடாளுமன்றத்துக்குள் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. இதனால் நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கி உள்ளன. எதிர்க்கட்சிகளின் சலசலப்புக்கு மத்தியில் இன்று மாநிலங்களவை கூடியது பெகாசஸ் செல்போன் உளவு விவகாரத்தை திரிணாமுல் காங்கிரஸ் எழுப்பியது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில் அளிக்க கோரி அமளியில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மக்களவையில் காங்கிரசின் துணைத் தலைவர் கவுரவ் கோகோய், அசாம்-மிசோரம் எல்லை மோதலைப் பற்றி விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் கொடுத்துள்ளார். மக்களவையில் பெகாசஸ் செல்போன் உளவு விவகாரம் குறித்து விவாதிக்க காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் மணீஷ் திவாரி ஒத்திவைப்பு தீர்மானம் கொடுத்துள்ளார். இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் என்னும் உளவுமென்பொருளைப் பயன்படுத்தி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பத்திரிகையாளர்கள், மத்திய மந்திரிகள் உள்ளிட்ட 300 முக்கிய பிரமுகர்களின் செல்போன்களை ஒட்டு கேட்க இலக்கு வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சாதிவாரி கணக்கெடுப்பை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: காங். கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி திட்டவட்டம்!!
கோட்டக் மஹிந்திரா வங்கியில் ஆன்லைன் மூலம் புதிய வாடிக்கையாளர்கள் சேர்த்தல், புதிதாக கிரெடிட் கார்டுகளை வழங்க தடை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!!
மக்களவைத் தேர்தல்: உண்மையான பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி: காங். பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
கோட்டக் மஹிந்திரா வங்கி ஆன்லைன், செல்போன் செயலி மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க ரிசர்வ் வங்கி தடை
லுக்அவுட், ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட நிலையில் காதலியுடன் தாய்லாந்தில் பதுங்கியிருந்த பிரபல தாதா கைது
ஒப்புகைச் சீட்டுகளை பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்க்கக் கோரிய வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
மின்னணு வாக்கு இயந்திரத்தில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலரில் எந்த மாற்றமும் செய்ய முடியாது: உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்
தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி போராட்டம்: ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷம்
கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர் மோடி நடந்து கொள்கிறார்: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு
தேர்தல் பத்திர முறைகேடு விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு..!!
வயநாடு தொகுதி மக்களை துப்பாக்கிகளுடன் மிரட்டிய மாவேயிஸ்ட்டுகள்: தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தல்
நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி வசூலிக்க காங்கிரஸ் கட்சி திட்டம்: தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு