சேலம் : சேலத்தில் நேற்று மாலை இடி மற்றும் சூறாவளி காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இம்மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். சேலத்தில் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது. நேற்று மாலை 5 மணியளவில், வானில் கருமேகக்கூட்டங்கள் கூடியது. பின்னர் அரை மணிநேரம் பலத்த இடி மற்றும் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. பின்னர் அரைமணி நேரம் லேசான மழை பெய்தது. இதைத்தொடர்ந்து 6.30 மணியளவில் மீண்டும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இம்மழையால் சேலத்தில் தாழ்வான இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஒட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.