×

நடிகர் விஜய்யை ஏதோ தேசவிரோதி போல சித்தரித்து நீதிபதி விமர்சித்தது நியாயமற்றது : ஐகோர்ட்டில் விஜய் தரப்பு காரசார வாதம்!!

சென்னை : நடிகர் விஜய்யை ஏதோ தேசவிரோதி போல சித்தரித்து நீதிபதி விமர்சித்தது நியாயமற்றது என்று ஐகோர்ட்டில் விஜய் தரப்பு காரசாரமாக வாதிட்டுள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் கார் நுழைவு வரி விவகாரத்தில் நடிகர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கடுமையாக விமர்சித்துவிட்டு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து ரூ.1 லட்சம் அபராதம் மற்றும் தனி நீதிபதியின் கருத்துக்களை நீக்கக் கோரி நடிகர் விஜய் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து இருந்தார்.

இந்த மனு இன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் விஜய் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய நாராயணன், இறக்குமதி கார் மீதான நுழைவு வரி விவகாரத்தில் தனி நீதிபதி தெரிவித்த தேவையில்லாத கருத்துக்களை நீக்க வேண்டும். ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்த வேண்டும் என்ற உத்தரவை எதிர்க்கவில்லை, மதிக்கிறோம். இறக்குமதி கார் மீது நுழைவு வரி விதிக்கக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவு அமலில் இருந்ததால் வழக்கு தொடர்ந்திருந்தோம். இதே போன்ற வழக்குகளில் வெறுமனே நிராகரித்த நீதிமன்றம், விஜய் வழக்கில் மட்டும் அவரை பற்றி விமர்சித்துள்ளது.

விஜய் மீது கூறப்பட்ட நியாயமற்ற விமர்சனங்களை நீக்க வேண்டும்.விஜய்க்கு விதிக்கப்பட்ட ரூ.1 லட்சம் அபராதத் தொகையை ரத்து செய்ய வேண்டும்.வழக்குக்கும் மனுதாரர் செய்யும் தொழிலுக்கும் என்ன தொடர்பு உள்ளது.எல்லா நடிகர்களையும் பொத்தாம் பொதுவாக மனம்போன போக்கில் தனி நீதிபதி விமர்சித்ததை ஏற்க முடியாது.நடிகர் விஜய்யை ஏதோ தேச விரோதி போல சித்தரித்து நீதிபதி விமர்சித்தது நியாயமற்றது.விஜய் தொடர்ந்த வழக்கு 9 ஆண்டுகள் கிடப்பில் இருந்ததற்கு அவரா காரணம் ?.விஜய்யை கடுமையாக விமர்சித்துவிட்டு அபராதம் விதித்தது வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் உள்ளது.வரி விதிப்பை எதிர்த்து வழக்கு தொடர ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது,என்று வாதிட்டார். 


Tags : Vijay , உயர்நீதிமன்றம்
× RELATED நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான...