டெல்லி: இந்தியாவில் இதுவரை 44 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. அனைத்து மாநிலங்களிலும் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் முக கவசம் அணிவது, சமூக இடைவெளி,தடுப்பூசி போடுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.