மதுரை: மதுரை எய்ம்ஸ் தற்காலிக வெளிநோயாளிகள் பிரிவை உடனடியாகஉருவாக்கவும், எம்பிபிஎஸ் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்தவும் உத்தரவிட வேண்டும் என கோரி தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் மூத்த வக்கீல் வீராகதிரவன் ஆஜராகி, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலரின் பதில் மனுவை தாக்கல் செய்தார். அதில், ‘‘எய்ம்ஸ் குறித்து முடிவெடுப்பது தொடர்பாக கடந்த 16ம் தேதி கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில், வரும் கல்வி ஆண்டில் 50 இடங்களைக் கொண்டு எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையை துவக்குவது தொடர்பான தமிழக அரசின் பரிசீலனை முன்வைக்கப்பட்டது.