ஆறுமுகசாமி ஆணைய வழக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைப்பு

புதுடெல்லி: ஓய்வு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் தொடர்பான  வழக்கை அடுத்த 4 வாரத்திற்கு உச்ச நீதிமன்றம் நேற்று ஒத்திவைத்துள்ளது. ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான சந்தேகங்கள் குறித்து விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. ஆனால் இந்த ஆணையத்தின் விசாரணை மாறுபட்ட கோணத்தில் செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டும் அவர் நேரில் ஆஜராகவில்லை. இதைத்தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுவில் முகாந்திரம் இல்லை எனக்கூறி அதனை தள்ளுபடி செய்தது.

இதையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக மருத்துவமனை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கானது நேற்று உச்ச நீதிமன்றத்தில்  நீதிபதி அப்துல்நசீர் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கை அடுத்த நான்கு வாரத்திற்கு ஒத்திவைப்பதாக உத்தரவிட்டனர். இதில் ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகசாம் முடிவடைந்த நிலையில் மேலும் ஆறு மாதம் நீட்டித்து தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு மேலாக முன்னதாக உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: