காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே கீழ்கதிர்பூர் கிராமம் புதுத் தெருவை சேர்ந்தவர் கங்காதரன் (35). லாரி டிரைவர். இவரது மனைவி அர்ச்சனா (32). 2 மகன்கள் உள்ளனர். கங்காதரனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனல், தினமும் அவர் மது அருந்திவிட்டு வீட்டில் தகராறு செய்வது வழக்கம். இதையொட்டி கணவன், மனைவி இடையே வாக்குவாதம் நடக்கும். மேலும் கங்காதரன், குடும்ப செலவுக்கும் பணம் கொடுப்பது கிடையாது என கூறப்படுகிறது. இதனால் குடும்பம் நடத்த முடியாமல் அர்ச்சனா, குழந்தைகளுடன் தவித்துள்ளார். இதனால், அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, தனித்தனியாக வசித்தனர். இதையடுத்து கங்காதரன், அர்ச்சனா வசிக்கும் எதிர் வீட்டில் குடியேறினார். இதற்கிடையில், குடும்ப செலவை சமாளிக்க அர்ச்சனா, அதே பகுதியில் உள்ள கடையில் வேலைக்கு சேர்ந்தார்.