புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் மணிஷ் திவாரி வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘எனது நாடாளுமன்ற சக பாஜ எம்பிக்கள் மூலம் கிடைத்த தகவலின்படி, வருகின்ற 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு மக்களவைத் தொகுதிகள் எண்ணிக்கை 1,000 ஆக அதிகரிக்க உள்ளதாக தெரிகிறது. புதிதாக கட்டப்பட்டு வரும் நாடாளுமன்றக் கட்டிடத்தில் ஆயிரம் எம்பிக்கள் அமரும் வகையில் மக்களவை வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக மக்களின் கருத்துகளைக் கேட்டறிய வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.