சென்னை: மாநகர் போக்குவரத்துக்கழகம் சார்பில், அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: தற்போது ஒய்வுபெற்ற பணியாளர்கள் தினக்கூலி அடிப்படையில் பணியமர்த்தி பாதுகாவலர், பங்க் நேரம் காப்பாளர் மற்றும் தலைமையகத்தில் மருத்துவ உதவியாளர் பணி செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஓய்வுபெற்ற போக்குவரத்து பணியாளர்கள் எவரையும் தற்காலிக பணிக்கு பணி அமர்த்தவில்லை என்ற அறிக்கையை பொது மேலாளருக்கு (இயக்கம்) அனுப்பி வைக்க வேண்டும் .