இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தேர்தல்: மக்கள் ஓட்டு போட்டனர்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தேர்தல் நடத்த பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் திட்டமிட்டது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இருப்பினும், வாக்குப்பதிவு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு தேர்தல் பணிகள் முழு வீச்சில் நடந்தது.  மொத்தம் 45 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. இதில், 33 தொகுதிகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ளது. மீதமுள்ள 12 தொகுதிகள் பாகிஸ்தானின் வெவ்வேறு நகரங்களில் குடியேறிய அகதிகளுக்கானவை. மொத்தம் 700க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில், 316 பேர் சுயேட்சை வேட்பாளர்கள். நேற்று காலை வாக்குப்பதிவு நடந்தது.

Related Stories: