முக்கிய செய்தி சென்னை தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி திட்டம் வருகிற புதன்கிழமை முதல்வர் துவக்கி வைப்பார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி Jul 25, 2021 முதல் அமைச்சர் அமைச்சர் மா சுப்பிரமணியன் சென்னை: தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை வருகிற புதன்கிழமை முதல்வர் துவக்கி வைப்பார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கலைஞரின் பிறந்தாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சைதாப்பேட்டையில் நடைபெற்றது. அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டி: இந்தியாவிலேயே முதல்முறையாக தனியார் மருத்துவமனைகளில் சிஎஸ்ஆர் பங்களிப்பில் இலவச தடுப்பூசி போடும் திட்டத்தை தமிழ்நாடு தொடங்கவிருக்கிறது. இந்தியாவிலேயே முன்மாதிரி முயற்சியாக இது அமையும். அதன்படி வருகிற புதன்கிழமை காலை 10 மணிக்கு ஆழ்வார்பேட்டை காவிரி மருத்துவமனையில் அடையார் ஆனந்தபவன் உணவகத்தின் சிஎஸ்ஆர் நிதியில் இலவச தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. தமிழக முதல்வர் நேரடியாக வந்து இலவச தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைக்க இருக்கிறார். ஆழ்வார்பேட்டை பொதுமக்கள் இதன்மூலம் தனியார் மருத்துவமனையில் போடப்படும் இலவச தடுப்பூசி திட்டத்தில் பயனடைய இருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இந்த திட்டம் வருகிற வியாழக்கிழமை முதல் தொடரப்பட உள்ளது.எந்த நிறுவனத்தின் சிஎஸ்ஆர் எந்த மருத்துவமனையுடன் இணைந்துள்ளது, இதன்மூலம் எத்தனை பேருக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கப்பட உள்ளது என்பது குறித்த தகவல்கள் ஒவ்வொரு மருத்துவமனையின் வளாகத்திலும் வைக்கப்பட்டு அந்தபகுதி பொதுமக்களிடையே கொண்டு சேர்க்கப்படும். பல்வேறு தொழில்நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு அந்த பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து அவர்களுக்கு வழங்கப்பட இருக்கும் 25% கோட்டாவை பயன்படுத்தி கொள்ள இருக்கிறார்கள். திருப்பூர், ஈரோடு, கோவை, சேலம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இருந்து மருத்துவமனைகள் சார்பில் 107 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். சென்னை, திருவள்ளூர், திருப்பத்தூர், வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இருந்து 137 மருத்துவ பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். பெரும்பாலான மருத்துவமனைகள் சிஎஸ்ஆர் உடன் இணைந்து இந்த திட்டத்தை உடனடியாக துவக்க இருக்கிறார்கள். மேலும் மருத்துவமனைகள் மற்றும் சிஎஸ்ஆர் ஒருங்கிணைப்பு பணிகளை அந்தந்த மாவட்ட ஆட்சி தலைவர்கள் மேற்கொண்டுவருகிறார்கள்.
பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு, ராகுலின் பிரசாரம் குறித்து புகார், பா.ஜ – காங்கிரசுக்கு நோட்டீஸ்: தேர்தல் ஆணையம் அதிரடி, 29ம் தேதிக்குள் விளக்கமளிக்க கெடு
தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் அரசு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு மே 6ம் தேதி உள்ளூர் விடுமுறை
நாடாளுமன்ற 2ம் கட்ட தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது; 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு: ராகுல், சசிதரூர், டி.கே.சுரேஷ் தொகுதிகளுக்கும் நடக்கிறது
பள்ளிக் குழந்தைகளை அடிப்பது போன்ற தண்டனையை தடுக்கும் விதிகளை அமல்படுத்த பள்ளிக்கல்வித் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
முகூர்த்த தினம், வார இறுதிநாளை முன்னிட்டு விழுப்புரம் கோட்டம் சார்பில் 450 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: அரசுப் போக்குவரத்துக் கழகம்
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பற்றி தவறான தகவல் பரப்புவதா? நேரில் சந்தித்து விளக்கம் அளிக்கிறேன் : பிரதமருக்கு கார்கே கடிதம்!!
மதுபானக் கொள்கை முறைகேட்டில் கெஜ்ரிவாலுக்கு ரூ.100 கோடி லஞ்சம்.. 170 செல்போன்களை பயன்படுத்தியுள்ளார் : அமலாக்கத்துறை விளக்கம்
பெண்களின் தாலிக்கு ஆபத்து… பெண்களுக்கு வழங்கப்படும் தாய் வீட்டு சீதனத்தை பறிக்க காங்கிரஸ் திட்டம் : பிரதமர் மோடி மீண்டும் சர்ச்சை பேச்சு
பிரதமர் மோடிக்கு நேரடியாக நோட்டீஸ் அனுப்ப தைரியம் இல்லை… பாஜகவின் பி டீம் ஆனது தேர்தல் ஆணையம் என காங்கிரஸ் விமர்சனம்!!
தமிழ்நாட்டில் தள்ளிப்போகிறதா பள்ளிகள் திறப்பு? அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆலோசனை
தமிழ்நாட்டில் தீவிர வெப்ப அலை நிலவுவது தொடர்பாக தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம்: இந்திய வானிலை ஆய்வு மையம் தலைவர்
ஏப்ரல் 29 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்பநிலை 2-4 டிகிரி செல்சியஸ் உயர வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் இதுவரை அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 3,24,884 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்: பள்ளிக்கல்வி துறை தகவல்
மதம், சாதி அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பிரதமர் மோடி வெறுப்பு பேச்சு : பாஜக தலைமைக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
மக்களவை தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்காக பிரச்சாரம் செய்ததற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கூட்டணி கட்சி தலைவர்கள் நன்றி!!
ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகள் எதிரொலி: இந்திய பங்குச்சந்தைகளில் கோட்டக் மகேந்திரா வங்கி பங்குகளின் விலை கடும் சரிவு