×

விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் குறைந்த வாடகைக்கு வேளாண் இயந்திரம்: திருவள்ளூர் கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் அறிக்கை; தமிழ்நாடு அரசு வேளாண்மை பொறியியல் துறை பல்வேறு புதிய நவீன வேளாண் இயந்திரங்கள், கருவிகள் வாங்கி விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு வழங்கி வருகிறது. திருவள்ளுர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மிகுந்த பயனை தரக்கூடிய வேளாண் இயந்திரங்களான 4 மண் தள்ளும் இயந்திரங்கள், 10 டிராக்டர்கள், 2 டயர் வகை மண் அள்ளும் இயந்திரங்கள் இருப்பில் உள்ளன. நிலம் சமன் செய்தல், கரும்பு, காய்கறி நாற்று நடவு செய்தல், பல்வேறு பயிர்களை கதிரடித்தல், வைக்கோல் கட்டுதல். வாழைத் தண்டை துகளாக்குதல், வரப்பு செதுக்கி சேறு பூசுதல், நீர் இறைத்தல் உள்ளிட்ட வேளாண் பணிகளை மேற்கொள்வதற்கும் டிராக்டரால் இயங்கக்கூடிய இயந்திரங்களும் வேளாண் பொறியியல் துறையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

டிராக்டரால் இயங்கக்கூடிய அனைத்து கருவிகளும் டிராக்டருடன் மணிக்கு ரூ.340 என்ற குறைந்த வாடகை அடிப்படையில் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வாடகைக்கு வழங்கப்படுகின்றன. நிலம் சமன் செய்ய மண் தள்ளும் இயந்திரம் மணிக்கு ரூ.840 என்ற குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வாடகைக்கு வழங்கப்படுகின்றன. மண் அள்ளுவதற்கும், பண்ணைக் குட்டைகள் அமைத்திடவும் புதர்களை அகற்றவும், சக்கரவகை மண் அள்ளும் இயந்திரங்கள் மணிக்கு ரூ.660 க்கும் விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்கப்படுகின்றன.

மேலே குறிப்பிட்ட வேளாண் இயந்திரங்கள், கருவிகள் தேவைப்படும் விவசாயிகள் வேளாண்மைப் பொறியியல் துறையின் உபகோட்ட அலுவலகத்தினை அணுகி பயனடையயுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வேளாண்மை பொறியியல் துறை திருவள்ளுர் உதவி செயற் பொறியாளர்  9443957921, திருத்தணி உதவி செயற் பொறியாளர் 9789597447, பொன்னேரி உதவி செயற் பொறியாளர் 9789597447 மற்றும் திருவள்ளுர் செயற் பொறியாளர் 9585709929 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags : Agricultural machinery for low rent on priority basis for farmers: Tiruvallur Collector Information
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...