ஆவடி: அயப்பாக்கத்தில் சட்டக்கல்லூரி மாணவரை வெட்டிய மூவரை போலீசார் கைது செய்தனர். அம்பத்தூரை அடுத்த பாடி, டிஎம்பி நகர், பெரியார் 5வது தெருவை சேர்ந்தவர் ஆரிஸ் (21). இவர், சட்டக்கல்லூரி மாணவர். கடந்த 22ம் தேதி இரவு ஆவடியை அடுத்த அயப்பாக்கம் அன்னை தெரசா பூங்கா அருகில் நின்று தோழிகளுடன் பேசி கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த 3 பேர் ஆரிஸிடம் வீண் தகராறு செய்ததுடன் அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சரமாரியாக வெட்டினர். படுகாயம் அடைந்த ஆரிஸை, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.