முக்கிய செய்தி இந்தியா வாக்காளர்களுக்கு பணம் அளித்த குற்றச்சாட்டு: தெலுங்கானா ராஷ்ட்ரிய சமீதி கட்சியின் எம்.பி மாலோத் கவிதாவிற்கு 6 மாதம் சிறை தண்டனை Jul 25, 2021 தெலுங்கானா ராஷ்டிரிய சாமிதி கட்சி மலோத் கவிதா தெலுங்கானா: வாக்காளர்களுக்கு பணம் அளித்த குற்றச்சாட்டில் தெலுங்கானா எம்.பிக்கு 6 மாதம் சிறை தண்டனை அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019- ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் போது, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த குற்றச்சாட்டில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமீதி கட்சியின் எம்.பி மாலோத் கவிதாவிற்கு 6 மாதம் சிறை தண்டனை அளித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எம்.பி மாலோத் கவிதாவின் உதவியாளருக்கும் 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டது. அதேநேரத்தில், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்காக ஜாமீன் வழங்கி உள்ளது. தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியைச் சோ்ந்தவா் மாலோத் கவிதா. இவா் கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் தெலங்கானா மாநிலம் மெஹபூபாபாத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் தோ்தலின்போது மாலோத் கவிதாவுக்கு வாக்களிக்குமாறு பத்ராத்ரி-கொத்தகூடம் மாவட்டத்தில் டிஆா்எஸ் கட்சித் தொண்டா் ஒருவா் பொதுமக்களுக்குப் பணம் அளித்தார். அவரை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனா். இதையடுத்து, வாக்களிக்க பணம் அளிக்கப்பட்டது தொடா்பாக மாலோத் கவிதா மற்றும் அந்தத் தொண்டா் மீது போலீசாா் வழக்குப்பதிவு செய்தனா். தோ்தலில் மாலோத் கவிதா வெற்றி பெற்றதையடுத்து அந்த வழக்கு ஹைதராபாதில் உள்ள எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
உத்தரப் பிரதேச மாநில எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மக்களவை தேர்தலில் கண்ணூஜ் தொகுதியில் போட்டி என சமாஜ்வாடி கட்சி அறிவிப்பு!
அரசியல் சட்டப்படி அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி பெறும் உரிமையை அளித்திட வேண்டும்; முதல்வருக்கு பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோரிக்கை
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வெயில்!: வெப்பத்தின் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?..செய்ய வேண்டியவை.. செய்யக் கூடாதவை என்னென்ன?
கோட்டக் மஹிந்திரா வங்கியில் ஆன்லைன் மூலம் புதிய வாடிக்கையாளர்கள் சேர்த்தல், புதிதாக கிரெடிட் கார்டுகளை வழங்க தடை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!!
மயிலாடுதுறை தருமபுரம் ஆதினத்திற்கு மிரட்டல் விடுத்த வழக்கு; கலைமகள் கல்வி நிறுவனத்தின் தாளாளர் குடியரசுக்கு ஜாமின் வழங்க ஐகோர்ட் மறுப்பு..!!
தமிழ்நாட்டில் நேற்று சாதனை அளவாக 40.50 மெகா யூனிட் சூரிய மின்சாரம் பயன்படுத்தப்பட்டது: மின்வாரியம் தகவல்
மோடியின் சர்ச்சை பேச்சு விவகாரம்; போர் காலத்தில் பாட்டி நகை கொடுத்தார் தாய் ‘மாங்கல்யத்தை’ தியாகம் செய்தார்: பிரியங்கா காந்தி பதிலடி
ஒப்புகைச் சீட்டுகளை பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்க்கக் கோரிய வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
இட ஒதுக்கீட்டை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் இந்தியா கூட்டணி அரசு செயல்படும்: சமாஜிக் நியாயக் சம்மேளன மாநாட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி
தோல்வி பயம் வந்துவிட்டதால்தான் பிரதமர் மோடி தேவையில்லாமல் சர்ச்சைக்குரிய வகையில் பேசுகிறார்: ஆர்.எஸ்.பாரதி பேட்டி
இந்தியாவில் நேற்று பதிவான அதிகபட்ச வெப்பநிலையில் சேலம் 3ம் இடம் (108.14°F) பிடித்துள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல்
நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி வசூலிக்க காங்கிரஸ் கட்சி திட்டம்: தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
ஸ்மோக் பிஸ்கட்(Smoke Biscuits) குழந்தைகள் உட்கொள்ள வேண்டாம், அது உயிருக்கு ஆபத்து: உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
பிரதமர் மோடியின் நண்பர்களிடம் இருந்து பணம் மீட்கப்பட்டு 90% மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்: ராகுல்காந்தி வாக்குறுதி