திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை சாம்பல் நிற அணில்கள் சரணாலயத்தில் தற்போது அணில்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மலைவாழ் மக்கள் தெரிவித்துள்ளனர். திருவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலையில் புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, கரடி, ராஜநாகம், புள்ளிமான்கள் என ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இங்கு சாம்பல்நிற அணில்கள் அதிகமாக இருப்பதால், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை தமிழக அரசு சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் என அறிவித்துள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான சாம்பல் நிற அணில்கள் உள்ளன.