தமிழகம் நாய்கள் கடித்து மான் சாவு Jul 25, 2021 மரக்காணம்: மரக்காணம் அருகே குரும்புரம் பகுதியில் 750 ஏக்கர் பரப்பளவில் அபூர்வ மூலிகை வனம் உள்ளது. இந்த காட்டில் மான்கள், மயில்கள், முள்ளம் பன்றிகள், காட்டு ப்பன்றிகள் அதிகளவில் உள்ளன. இந்த விலங்குகளுக்கு காட்டுப்பகுதியில் தேவையான குடிநீர் கிடைப்பதில்லை. இதனால் இதுபோன்ற பாதுகாக்கப்பட்ட வன விலங்குகள் குடிநீர் தேடி அருகில் இருக்கும் கிராமங்களுக்கு வருகின்றபோது எதிர்பாராதவிதமாக வாகனங்களில் அடிபடுதல், சமூக விரோதிகளால் வேட்டையாடுதல் போன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக கூறுகின்றனர். இந்நிலையில் நேற்று காலை குரும்புரம் மூலிகை வனத்தில் இருந்து ஒரு புள்ளிமான் அருகில் இருந்த கிராமப்பகுதிக்கு வந்துள்ளது. அப்போது தெரு நாய்கள் புள்ளி மானை துரத்தி கடித்துள்ளது. இதனைப்பார்த்த அப்பகுதி இளைஞர்கள் தெரு நாய்களை துரத்திவிட்டு கடுகாயம் அடைந்த புள்ளிமானை மீட்டுள்ளனர். இதுகுறித்து இளைஞர்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று நாய்கள் கடித்து குதறிய புள்ளிமானை சிகிச்சையளிக்க கால்நடை மருத்துவரிடம் எடுத்துச்சென்றனர். ஆனால் வழியிலேயே மான் பரிதாபமாக இறந்துவிட்டது.
புதுக்கோட்டை அருகே ரூ.110 கோடி மதிப்பு போதைப்பொருள் பதுக்கியதாக கைதானவருக்கு மே 3 வரை நீதிமன்றக் காவல்..!!
தமிழ்நாட்டில் தீவிர வெப்ப அலை நிலவுவது தொடர்பாக தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம்: இந்திய வானிலை ஆய்வு மையம் தலைவர்
ஏப்ரல் 29 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்பநிலை 2-4 டிகிரி செல்சியஸ் உயர வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் இதுவரை அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 3,24,884 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்: பள்ளிக்கல்வி துறை தகவல்
திருச்சியில் ஓடும் பேருந்தில் இருக்கை கழன்று விழுந்த விவகாரம்; பணிமனை மேலாளர் உள்பட 3 பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவு
மானாமதுரையில் நள்ளிரவில் களைகட்டிய நிலாச்சோறு திருவிழா: நிலவொளியில் குடும்பத்தினருடன் விருந்துண்டு மகிழ்ச்சி
தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான பணம் பிடிபட்ட நிலையில் ரூ.4 கோடி பணத்தை மட்டும் ஏன் பெரிது படுத்துகிறீர்கள்? :பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் கேள்வி
காவேரி கூக்குரல் சார்பில் ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி கருத்தரங்கு..! புதுக்கோட்டையில் அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைக்கிறார்