தமிழகம் களக்காடு அருகே கரடிகளை தொடர்ந்து ஒற்றை யானை அட்டகாசம் Jul 25, 2021 களக்காடு: களக்காடு அருகே கரடிகளை தொடர்ந்து ஒற்றை யானையும் விளைநிலங்களுக்குள் புகுந்து பனை மரங்களை சாய்த்து அட்டகாசம் செய்தது. இதனால் விவசாயிகள் பீதியடைந்து உள்ளனர். களக்காடு அருகே உள்ள கள்ளிகுளம் கிராமத்தில், கடந்த சில நாட்களாக விளைநிலங்களில் கரடிகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. தண்ணீர் குழாய்களை உடைத்தும், மாங்காய்கள், நெல்லிக்காய்களை பறித்தும் சேதப்படுத்தி வருகின்றன. இந்த கரடிகளை விரட்ட வனத்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் களக்காடு தலையணை மலையடிவாரத்தில் ஒற்றை யானையும் அட்டகாசம் செய்து வருகிறது. மலையடிவார புதர்களில் தஞ்சமடைந்துள்ள ஒற்றை யானை, இரவு நேரங்களில் கள்ளியாறு விளைநிலங்களுக்குள் புகுந்து பனை மரங்களை வேருடன் சாய்த்து வருகிறது. களக்காடு புதுத்தெருவை சேர்ந்த விவசாயி சுரேசுக்கு சொந்தமான 2 பனை மரங்களை யானை சாய்த்துள்ளது. இதுபற்றி களக்காடு புலிகள் காப்பக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து புலிகள் காப்பக துணை இயக்குநர் அன்பு உத்தரவின் பேரில் வனச்சரகர் பாலாஜி மற்றும் வனத்துறையினர் அங்கு சென்று யானை சாய்த்த பனை மரங்களை பார்வையிட்டனர். விவசாயிகளை அச்சுறுத்தி வரும் யானையை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுப்பதுடன் யானை நாசம் செய்த பனை மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
குலசேகரம் அருகே அதிகாலை பரபரப்பு; 2 பேரை கடித்து குதறிய புலி இறந்தது: ரப்பர் தோட்டத்தில் சினிமா பாணியில் கட்டிப்புரண்டு சண்டை
குள்ளஞ்சாவடி அருகே நள்ளிரவில் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு; 4 பேர் கைது: போலீசார் குவிப்பு
அவள்‘ திட்டத்தின் கீழ், வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் பெண்களுக்கான விழிப்புணர்வு பயிலரங்கு
மோப்ப நாய் பிரிவிற்கு புதிதாக வந்துள்ள பெல்ஜியன் ஷெப்பர் வகையைச் சேர்ந்த 3 நாய் குட்டிகளுக்கு பெயர் சூட்டினார் காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர்
தொல்லியல் துறை ஆய்வுக்கு உயர்நீதிமன்றம் ஆணை: வழக்கில் தீர்ப்பு வரும் வரை வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும்: அன்புமணி
அரசியல் சட்டப்படி அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி பெறும் உரிமையை அளித்திட வேண்டும்; முதல்வருக்கு பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோரிக்கை
Group I, Group II, Group IV உள்ளிட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கான அதிகாரப்பூர்வ தேதிகள் அறிவிப்பு
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வெயில்!: வெப்பத்தின் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?..செய்ய வேண்டியவை.. செய்யக் கூடாதவை என்னென்ன?
சென்னையில் பயங்கரம்!: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் சிறுமி கொலை.. தாயின் ஆசை காதலன் வெறிச்செயல்..!!