×

2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீ நகர்: ஜம்மு காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் உள்ளது சோக்பாபா வனப்பகுதி. அடர்ந்த மரங்கள் நிறைந்த இங்கு, மர்ம நபர்களின் நடமாட்டம் இருப்பதாக ராணுவத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அந்த காட்டுப் பகுதியை நேற்று பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். இந்த தேடுதல் வேட்டையின்போது மறைந்திருந்த தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். ராணுவத்தினர் எதிர் தாக்குதல் நடத்தியதில் அடையாளம் தெரியாத 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த மோதலில் 3 வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். சோக்பாபா காட்டில் மேலும் தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்பதால் தேடுதல் பணி தொடர்கிறது. 


Tags : Terrorist, murder, army
× RELATED டெல்லி வக்பு வாரிய பணி நியமன முறைகேடு...