×

போதைபொருட்களை பதுக்கி விற்ற 7 பேர் கைது

துரைப்பாக்கம் : சென்னை சோழிங்கநல்லூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சாலையில் உள்ள மளிகை கடையில் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற  போதைப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக,  துரைப்பாக்கம் உதவி கமிஷனர் ரவிக்கு நேற்று காலை ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து உதவி கமிஷனர் தலைமையில், போலீசார் நேற்று அப்பகுதியில் உள்ள கடைகளில்  திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கிருந்த மளிகை மற்றும் டீ கடைகளில்,  தடை செய்யப்பட்ட ஹான்ஸ்,பான்பராக் உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். இதனையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த போலீசார், போதைபொருட்களை பதுக்கி வைத்து, விற்பனை செய்து வந்த மளிகை மற்றும் டீ  கடை உரிமையாளர்களான சோழிங்கநல்லூரை சேர்ந்த சகாயராஜ்(39), அகமது(25),உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags : Drugs, sale, arrest
× RELATED சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று...