பெகாசஸ் உளவு மென்பொருள் மூலமாக தலைவர்களின் செல்போன் உரையாடலை ஒட்டுக்கேட்ட விவகாரத்தில் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தேச துரோகம் செய்துள்ளனர். :- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.
சென்னை 2வது விமான நிலைய திட்டத்துக்கு தமிழக அரசு, மத்திய அரசு, விமான நிலைய ஆணைய மூத்த அதிகாரிகளை கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்க வேண்டும். :-பாமக நிறுவனர் ராமதாஸ்.
பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் கட்சி தலைவர்கள், நீதிபதிகள், ஒன்றிய அமைச்சர்களுடைய செல்போன் உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்ட விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும். :- இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்.
மேற்கு வங்க மாநிலத்தில் என் மீது போடப்பட்டுள்ள எல்லா குற்ற வழக்குகளையும் சிபிஐக்கு மாற்றுவதற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். :- மேற்கு வங்க எதிர்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி.