புதுடெல்லி: ஒடிசாவில் நடத்தப்பட்ட ஆகாஷ்-என்ஜி ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது. இது குறித்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஒடிசா மாநிலத்தின் பாலசோர் கடற்கரையில் நேற்று ஆகாஷ்- என்ஜி ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. தரையிலிருந்து வானிலுள்ள இலக்கை தாக்கும் திறன் கொண்டதாக இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட்டு உள்ளது. 30 கிமீ தொலைவில் உள்ள இலக்கை இந்த ஏவுகணை துல்லியமாக தகர்த்தது.