2 நாட்களில் 2வது முறை ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி

புதுடெல்லி: ஒடிசாவில் நடத்தப்பட்ட ஆகாஷ்-என்ஜி ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது. இது குறித்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஒடிசா மாநிலத்தின் பாலசோர் கடற்கரையில் நேற்று ஆகாஷ்- என்ஜி ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. தரையிலிருந்து வானிலுள்ள இலக்கை தாக்கும் திறன் கொண்டதாக  இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட்டு உள்ளது. 30 கிமீ தொலைவில் உள்ள இலக்கை இந்த ஏவுகணை துல்லியமாக தகர்த்தது.

உள்நாட்டிலுள்ள பல்வேறு அரசு அமைப்புகளுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள ஆகாஷ் ஏவுகணை, வெற்றிகரமாக 2வது முறையாக பரிசோதிக்கப்பட்டு உள்ளது,’ என கூறப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை நேற்று முன்தினமும் வெற்றிகரமாக ஏவி பரிசோதிக்கப்பட்டது.

Related Stories: