×

எஸ்ஐக்கு கொலை மிரட்டல்

சென்னை: நொளம்பூர் 4வது பிரதான தெருவை சேர்ந்த அரசு அதிகாரி ஒருவர், தனது வீட்டின் முன், ஜல்லி மற்றும் மணல் கொட்டி வைத்துள்ளார். நேற்று அவ்வழியாக சென்ற செனிஷ்குமார் (26) என்பவர், இதுதொடர்பாக, அந்த அதிகாரியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுபற்றி அவர் நொளம்பூர் காவல் நிலையத்தில் தெரிவித்தார். அதன்பேரில், எஸ்ஐ கோவிந்தராஜ் சம்பவ இடத்துக்கு சென்றபோது, செனிஷ்குமார், எஸ்ஐயை ஆபாசமாக பேசியதோடு,  கொலை  மிரட்டல் விடுத்துள்ளார். அவரை கைது செய்தனர்.




Tags : Death threat to SI
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...