திருவள்ளூர்: புட்ளூர் அங்காளம்மன் கோயிலில், பெண்களுக்கு வளைகாப்பு நடத்த கோயில் நிர்வாகம் மறுத்ததால், உறவினர்கள், கர்ப்பிணிகளை சாலையில் உட்கார வைத்து வளைகாப்பு நடத்தினர்.தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கோவில்களில் தரிசனத்துக்கு மட்டும் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளது. விழாக்கள் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்துள்ளது.இதைதொடர்ந்து, தமிழக அரசு பல்வேறு தளர்வுகள் அளித்து, அனைத்து மத கோவில்களும் வழிபட அனுமதி அளித்தது. தற்போது, ஆடி மாதம் பிறந்ததையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோயில்களிலும் பெண்கள் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர்.