சென்னை: சென்னை ராயபுரத்தில் பிரகாஷ் என்பவர் ரெடிமேட் கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 2019ம் ஆண்டு பாண்டிச்சேரியைச் சேர்ந்த செந்தில் (எ) மணிகண்டன் மற்றும் அவரது மனைவி விஜய நிர்மலா ஆகியோர் பாண்டிச்சேரி, விழுப்புரம், பண்ருட்டி மற்றும் திண்டிவனம் ஆகிய இடங்களில் துணி கடைகள் நடத்தி வருவதாகவும், கடைகளுக்கு துணிகளை மொத்தமாக சப்ளை செய்யக் கோரி ஆர்டர் கொடுத்ததாகவும் ரூ.1.30 கோடிக்கு ரெடிமேட் ஆடைகளை சப்ளை செய்ததாகவும் துணிகளை பெற்றுக்கொண்டு சிறிய தொகையை மட்டும் கொடுத்துவிட்டு மீதி பணம் ரூ.83 லட்சம் கொடுக்காமல் ஏமாற்றி வரும் தம்பதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொடுத்த புகார் மீது மத்திய குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.