சண்டிகர்: விவசாயிகளை குண்டர்கள் என்று அழைத்த ஒன்றிய அமைச்சர் மீனாட்சி லேகி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் வலியுறுத்தி உள்ளார். டெல்லியின் ஜந்தர் மந்தரில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் போது, பத்திரிகையாளர் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக, ஒன்றிய வெளியுறவு மற்றும் கலாசார துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி கருத்து தெரிவிக்கையில், ‘பத்திரிகையாளர் மீது தாக்குதல் நடத்தியவர் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்ட குண்டர்கள்’என்றார். மீனாட்சி லேகியின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், பஞ்சாப் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அமரீந்தர் சிங் கூறுகையில், ‘அமைச்சர் மீனாட்சி லேகியின் கருத்து, விவசாயிகளுக்கு எதிரான மனநிலையைக் காட்டுகிறது.