லாகூர்: சிறந்த பேட்ஸ்மேன் யார் என்பதில் இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி, பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதுபற்றி பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் கூறியிருப்பதாவது: விராட் கோஹ்லி போல் சர்வதேச கிரிக்கெட்டில் பாபர் 20 ஆயி்ரம் ரன்கள் எடுக்கட்டும். அதன்பின்னர் கோஹ்லியுடன் பாபர் அசாமை ஒப்பிடலாம். கோஹ்லியைப் போன்ற நீண்ட காலத்திற்கு தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டும். பாகிஸ்தான் அணியில் வேகப்பந்துவீச்சாளர்கள் பற்றாக்குறை உள்ளது.