பொன்னேரி: பழவேற்காடு மற்றும் சோழவரம் பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் குழந்தை பெற்றுக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிறுமிகளை திருமணம் செய்த வாலிபர்கள் மீது போலீசார் போச்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொன்னேரி அடுத்த பழவேற்காடு கோட்டைகுப்பம் செந்தியம்மன் நகரைச் சேர்ந்தவர் நாகராஜ் (24). இவர் கடந்த ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியான சிறுமியை கடந்த 18ம் தேதி கொருக்குப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு கடந்த 20ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.