ஆவடி அருகே பரபரப்பு; 17 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம்: போக்சோவில் வாலிபர் கைது

ஆவடி: ஆவடி அருகே 17வயது சிறுமியை கடத்தி சென்று பலாத்காரம்  செய்த வாலிபர் மீது போலீசார் போக்சோவில் வழக்குப்பதிந்து கைது செய்தனர். ஆவடி அடுத்த மோரை கிராமத்தில் வசிக்கும் ஒரு தம்பதியருக்கு 17 வயதில் மகள் உள்ளார்.  இந்நிலையில், கடந்த 16ம்  தேதி சிறுமி வீட்டில் இருந்து மாயமாகிவிட்டார். இதுகுறித்து, சிறுமியின் பெற்றோர் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில், சிறுமியின் உறவினரான போரூர், ஆலப்பாக்கம், பாரதியார் நகர், கம்பர் முதல் தெருவைச் சேர்ந்த கூலி தொழிலாளி முத்து (29) என்பவர் திருமண ஆசைகாட்டி கடத்தி சென்றிருப்பது தெரியவந்தது.  

இந்நிலையில், மோரையில் பதுங்கி இருந்த முத்துவை போலீசார் நேற்று மாலை சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும், அவரிடம் இருந்து 17வயது சிறுமியை  மீட்டனர். பின்னர், இருவரையும் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையம் கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தினர். அதில், முத்துவிற்கு திருமணமாகி மனைவி, 2குழந்தைகள் உள்ளனர். சிறுமியிடம் திருமண ஆசைகாட்டி சம்பவத்தன்று திருப்பதிக்கு கடத்தி சென்று அங்குள்ள ஒரு கோயிலில் வைத்து  கட்டாய தாலி கட்டி திருமணம் செய்துள்ளார்.  பிறகு, அங்கு வாடகைக்கு ஒரு அறை எடுத்து தங்கி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் போன்ற விவரங்கள் தெரியவந்தது.

போலீசார் தேடுவதை அறிந்த முத்து சிறுமியை மோரையில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வந்து விட வந்தபோது போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். இதையடுத்து, சிறுமியை கடத்தி கட்டாய திருமணம் செய்து பலாத்காரம் செய்த  முத்து மீது ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், போஸ்கோ சட்டத்தின்கீழ் பதிவு செய்து கைது செய்தனர்.

Related Stories: