சென்னை ஐஐடி மாணவனிடம் ரூ.25,000 ஆன்லைனில் மோசடி

சென்னை: சென்னை ஐஐடியில் பிஎச்.டி மாணவன் ராஜனிடம் ஆன்லைன் மூலம் மர்மநபர் ரூ.25,000 மோசடி செய்துள்ளார். பேராசிரியர் பெயரில் வந்த மின்னஞ்சல் செய்தியை பார்த்து ரூ.25,000க்கு கிஃப்ட் கூப்பன் வாங்கியுள்ளார். மீண்டும் கூப்பன் குறித்து மின்னஞ்சல் வந்ததால் சந்தேகம் அடைந்த மாணவன், பேராசிரியரிடம் கேட்டுள்ளார். தான் மின்னஞ்சல் எதுவும் அனுப்பவில்லை என்று பேராசிரியர் கூறியதை அடுத்து மாணவன் தான் ஏமாந்ததை உணர்ந்தார். மாணவன் அளித்த புகாரின் பேரில் ஆன்லைன் மூலம் மோசடியில் ஈடுபட்ட மர்மநபருக்கு போலீஸ் வலை வீசியுள்ளனர்.

Related Stories: