மீண்டும் ஏற்றம் காணும் தங்கத்தின் விலை: சவரனுக்கு ரூ.256 உயர்ந்து ரூ.36,528க்கு விற்பனை..! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 உயர்ந்து ரூ.36,528க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.32 உயர்ந்து ரூ.4,566க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 60 காசு குறைந்து ரூ.72.30க்கு விற்பனை ஆகிறது.  பொதுவாக தங்கம் விலையில் ஏற்றம், இறக்கம் காணப்படுவது வழக்கம் தான். தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றங்களை மிகவும் உற்றுநோக்கி கவனிப்பவர்கள் பெண்கள் தான்.

ஏனென்றால், பெண்கள் தங்களது முதலீட்டை அதிகமாக தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. இந்நிலையில், இன்று தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபாரணதங்கத்தின் விலை ரூ.256 அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு கிராமுக்கு ரூ.32 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.4,566-க்கும், ஒரு சவரன் ரூ.36,528-க்கும் விற்பனையாகிறது. மேலும் வெள்ளி ஒரு கிராமுக்கு 40 காசுகள் குறைந்து  ரூ.72.30-க்கு விற்பனையாகிறது.

Related Stories: