டிஎன்பிஎஸ்சியில் அதிகாரிகள் பதவியேற்பு

சென்னை: டிஎன்பிஎஸ்சி செயலாளர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஆகியோர் பதவியேற்று கொண்டனர்.  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்(டிஎன்பிஎஸ்சி) புதிய செயலாளராக  பி.உமா மகேஸ்வரி, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக கிரண் குராலா ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அவர்கள் சென்னை பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தில் பொறுப்பேற்று கொண்டனர். அவர்களுக்கு அதிகாரிகள், ஊழியர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories: