சொல்லிட்டாங்க...

இந்தியாவில் 80% பொம்மைகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதன் மூலம், பல ஆயிரம்  கோடி ரூபாய் வெளி நாடுகளுக்கு அந்நிய செலாவணியாக கிடைக்கிறது. - இந்திய பிரதமர் நரேந்திர மோடி

மனித உரிமைகளையும், ஜனநாயக  நடைமுறைகளையும் மதித்து, மக்களின் நண்பனாக சேவை புரியும் முறையில்  காவல்துறையின் பணிமுறையை மாற்றியமைப்பது உடனடி அவசியம். - இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன்

வடமாநிலங்களில் பருவ மழை  தீவிரமடைந்துள்ளது. எனவே விளைவிக்கப்பட்ட கோதுமை அழுகி வீணாகும் வாய்ப்பு  உள்ளது. உற்பத்தி செய்த கோதுமையை விற்க முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டு  வருகின்றனர். - காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி

கொரோனா நிவாரண பணிகளில் தோல்வி அடைந்துள்ள பாஜவுக்கு  தேர்தலில் தோல்விதான் கிடைக்கும்.  - கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா

Related Stories: