திருவனந்தபுரம்: மலையாள, இந்தி சினிமாவில் பிரபலமான பழம்பெரும் ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் சிவசங்கரன் மாரடைப்பால் மரணமடைந்தார். கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள ஹரிப்பாடு பகுதியை சேர்ந்தவர் சிவசங்கரன் நாயர் (89). புகைப்பட கலைஞரான இவர் கேரளா அரசின் முதல் புகைப்பட கலைஞராக இருந்தார். ஜவகர்லால் நேரு முதல் ஏராளமான தலைவர்களை இவர் புகைப்படம் எடுத்துள்ளார். மலையாள சினிமாவில் நிழல்பட கலைஞரானார். அதன்பின் ஒளிப்பதிவாளர் ஆனார். மலையாளம் மற்றும் இந்தியில் ஏராளமான படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். மேலும் இவர், சொப்னம், அபயம், யாகம், கிழிவாதில், கேசு உள்பட பல மலையாள படங்களை இயக்கியுள்ளார். சில இந்தி படங்களையும் இயக்கி உள்ளார். இவருக்கு 3 முறை தேசிய விருது கிடைத்துள்ளது.