நாளை முதல் நாக் அவுட் ஆட்டங்கள்

மியூனிக்: யூரோ  கோப்பை கால்பந்து  தொடரில் நாளை தொடங்கும்  காலிறுதிக்கு முந்தைய நாக் அவுட் சுற்றுக்கு  நடப்பு சாம்பியன் போர்ச்சுகல் உட்பட  16 அணிகள் முன்னேறியுள்ளன. மியூனிக் நகரில் நேற்று நடந்த  எப் பிரிவில்  ஆட்டத்தில்   ஜெர்மனி-ஹங்கேரி அணிகள் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா  செய்தன.   புதபெஸ்ட் நகரில் நடந்த போர்ச்சுகல்-பிரான்ஸ் இடையிலான  ஆட்டமும்  2-2 என்ற  கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.  லீக்  சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் முடிந்த நிலையில்  காலிறுதிக்கு முந்தைய நாக்  அவுட்  சுற்றுக்கு   நடப்பு சாம்பியன் போர்ச்சுகல் உட்பட மொத்தம் 16  அணிகள் தகுதிப் பெற்றுள்ளன.   

ஒவ்வொரு பிரிவில் இருந்தும் முதல் 2  இடங்களை பிடித்த இத்தாலி, வேல்ஸ்,  பெல்ஜியம், டென்மார்க், நெதர்லாந்து,  ஆஸ்திரியா, இங்கிலாந்து,  குரேஷியா, சுவீடன், ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி  என 12 அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின. ஒவ்வொரு பிரிவிலும்  3ம் இடம்  பிடித்த போர்ச்சுகல், செக் குடியரசு, சுவிட்சர்லாந்து, உக்ரைன்,  பின்லாந்து, ஸ்லோவாக்கியா என  6 அணிகளில்,  முதல் 4 அணிகள்  நாக் அவுட்  சுற்றுக்கு தேர்வாகியுள்ளன. நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் நாளை முதல்  ஜூன் 29ம் தேதி வரை நடைபெறும்.

Related Stories: