தமிழகத்தில் 6,162 பேருக்கு கொரோனா 18 மாவட்டங்களில் 100க்கும் கீழ் குறைந்த பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் நேற்று புதிதாக 6,162 பேருக்கு தொற்று பாதிக்கப்பட்ட நிலையில் 18 மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை 100க்கும் கீழ் குறைந்துள்ளது. அதைப்போன்று சிகிச்சை பெறுவர்களின் எண்ணிக்கையும் 50 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 1,70,283 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், 6,162 பேருக்கு தொற்று உறுதியானது. 9,046 பேர் நேற்று குணமடைந்தனர். இதனால், குணமடைந்தோர் எண்ணிக்கை 23,67,831 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று 372 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கோவையில் 756 பேர், ஈரோடு 641 பேர், சேலம் 419 பேர், தஞ்சாவூர் 305, திருப்பூர் 386, செங்கல்பட்டு 262 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. மேலும் 18 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 100க்கும் கீழ் குறைந்துள்ளது. 155 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

Related Stories: